வெள்ளி, 13 ஏப்ரல், 2018

கிரகங்களின் ஒளி


ஜோதிடம் என்றால் என்ன ? ஜோதிடம் என்பது வானமண்டலத்திலுள்ள நட்சத்திரங்கள் கூறும் செய்திகள். சரி அவைகள் எப்படி உலகிலுள்ள ஜீவா ராசிகளை தொடர்பு கொள்கின்றது ? வானமண்டலத்தில் உள்ள நட்சத்திரங்கள் தங்கள் ஒளியை பிரதிபலிக்கின்றது . மனிதர் ஆகிய நம்மால் அதை பார்க்க முடியாது.

சரி. வானமண்டலத்திலுள்ள நட்சத்திரங்கள் என்னென்ன என்பதை பார்ப்போம் .

1. சூரியன்
2. சந்திரன்
3. செவ்வாய்
4. புதன்
5. குரு
6. சுக்கிரன்
7. சனி
8. ராகு
9. கேது

இதில் மனிதர்களால் பார்க்ககூடிய கிரகங்கள் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், சுக்கிரன் மற்றும் சனி.

சரி ராகு, கேதுக்கள் ஏன் பார்க்க முடுயாது என்றால் அவைகள் நிழல் கிரகங்கள். சூரியன் மற்றும் சந்திரனுடைய  நிழல்கள் தான் ராகு கேதுக்கள் .

நான் மேலே சொன்ன கிரகங்கள் அனைத்தும் சூரியனை மையமாக வைத்தே இயங்குகிறது. அதாவது சூரிய ஒளியை வாங்கி அனைத்து கிரகங்கள் தன்னுடைய  சுபாவங்களுக்கு தகுந்தாற்  போல் பிரதிபலிக்கின்றது.

சரி . எந்தெந்த கிரகம் எவ்வளவு ஒளியை பூமிக்கு பிரதிபலிக்கின்றது என்பதை பார்ப்போம்.

சூரியனின் கதிர் அளவு – 30
சந்திரன் – 16
புதன் - 8
சுக்கிரன் – 12
செவ்வாய் – 6
குரு – 10
சனி – 1

மேலே குறிப்பிட்டது போல் சூரியன் ஓளியை அடுத்து சந்திரன் மற்றும் கிரகங்கள் வரிசை சூரியன் அருகில் இருந்து புதன், சுக்கிரன், செவ்வாய், குரு மற்றும் சனி.

இங்கே சனி சூரியனிடம் இருந்து வெகு தொலைவில் உள்ளது .

சரி. பூமிக்கும் சூரியனுக்கும் நடுவில் உள்ள கிரககள் புதன் மற்றும் சுக்ரன். பூமிக்கும் வெளிச்சுற்றில் உள்ள  கிரககள் செவ்வாய், குரு மற்றும் சனி.



1 கருத்து:

திக் பலம் சூட்சமங்கள்

கிரஹங்களின் பலத்தை கணக்கிடும்போது முதலில் ஸ்தான பலம் அதனையடுத்து திக் பலனை பார்க்கவேண்டும். திக் பலமானது கிரஹங்களின் திசை வலிமையை[Directi...